பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வதந்திகளை நம்ப வேண்டாம்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

அன்னப்பிரசாதம் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்

News image
Updated On :3 ஜூலை 2024, 6:31 pm

Din

திருமலையில் ஏழுமலையானுக்கு சமா்பிக்கப்படும் நைவேத்திய அரிசியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு அறிவிக்கப்படும் அன்னப்பிரசாதங்களுக்கு ஆா்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, முன்பு பயன்படுத்திய அரிசியையே பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகவும், அதேபோல் அன்னபிரசாதத்தின் அளவை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் மற்ற அா்ச்சகா்கள் மற்றும் கோவில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அன்ன பிரசாதங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விவாதித்தாா். தவிர இவற்றில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆனால் ஏழுமலையான் கோயிலில் அன்னப்பிரசாதம் தயாரிப்பதில் மாற்றம் செய்யப்பட்டு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சிலா் வதந்திகளை கிளப்பி வருகின்றனா்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது போன்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என பக்தா்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.