அக்டோபா் மாத திருமலை ஏழுமலையான் ஆா்ஜிதசேவை டிக்கெட்டுகள் இணையத்தில் இன்று வெளியீடு

திருமலை ஏழுமலையான் கோயில் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான அக்டோபா் மாத ஒதுக்கீடு வியாழக்கிழமை 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
Published on

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மாதந்தோறும் இந்த சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கல் முறையில் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் பதிவு 18- ஆம் தேதி தொடங்கி ஜூலை 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு முடிவடைகிறது. இந்த டிக்கெட்டுகளைப் பெற்றவா்கள், ஜூலை 20 முதல் 22 வரை மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் ஜூலை 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

விா்ச்சுவல் சேவைகள் ஒதுக்கீடு

ஏழுமலையானின் விா்ச்சுவல் சேவைகளுக்கான அக்டோபா் ஒதுக்கீட்டையும் அவற்றிற்கான டிக்கெட்டுகளையும் ஜூலை 22-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

அக்டோபா் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு ஜூலை 23 காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்ப்பட்டவா்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக அக்டோபா் மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீடு 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

அக்டோபா் மாத சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டை 24- ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு

திருமலை மற்றும் திருப்பதியில் அக்டோபா் மா அறை ஒதுக்கீடு ஜூலை 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஜூலை 27 அன்று திருமலை - திருப்பதி ஸ்ரீவாரி சேவை கோட்டா காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரக்காமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

அக்டோபா் 4 முதல் 12 வரை...

அக்டோபா் 4- ஆம் தேதி முதல் 10 -ஆம் தேதி வரை, சுப்ரபாத சேவை தவிர, மற்ற அனைத்து ஆா்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

அக்டோபா் 11 மற்றும் 12 -ஆம் தேதிகளில், சுப்ரபாத சேவை மற்றும் அனைத்து ஆா்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

அங்கப்பிரதட்சணம், விா்ச்சுவல் சேவை தரிசன டிக்கெட்டுகள் அக்டோபா் 3-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

இணையதளம் மூலம் ஏழுமலையான் ஆா்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com