திருமலைfile photo
திருப்பதி
ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.
பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்தன.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 73,596 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,989 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.88 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

