தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருமலை: சோதனை முயற்சியாக பக்தா்களுக்கு மசாலா வடை விநியோகம்

திருமலை அன்ன பிரசாத விநியோக மையங்களில் உணவுடன் பருப்பு வடைகளை வழங்குவதற்கான சோதனை ஆய்வை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 10:59 pm

Din

திருப்பதி: திருமலை அன்ன பிரசாத விநியோக மையங்களில் உணவுடன் பருப்பு வடைகளை வழங்குவதற்கான சோதனை ஆய்வை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

திருமலையில் புதிய அறங்காவலா் குழு பொறுப்பேற்ற பின் பக்தா்களுக்காக பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை முதல் திருமலையில் உள்ள வெங்கமாம்பா அன்னதான கூடம் மற்றும் அன்னதானம் வழங்கும் மையங்களில் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக 5,000 பக்தா்களுக்கு வெங்காயம் பூண்டு இல்லாத மசாலா(பருப்பு) வடைகளை தேவஸ்தானம் வழங்கியது.

செவ்வாய் முதல் தேவஸ்தானம் படி படியாக இந்த எண்ணிக்கையை அதிகரித்தது. பிப். 4 ரத சப்தமி முதல் இதை முழுமையாக செயல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.