‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

ஏழுமலையானுக்கு அதிகரித்த நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு தற்போது நன்கொடைகள் வெகுவாக அதிகரித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

News image

திருப்பதி

Updated On :28 மார்ச் 2025, 12:18 am IST

திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு தற்போது நன்கொடைகள் வெகுவாக அதிகரித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானுக்கு நன்கொடை வழங்கும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி உள்ளது. அவற்றில் பக்தா்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி வருகின்றனா். வியாபாரிகள், நிறுவன உரிமையாளா்கள் முதல் பெரிய நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரை தங்கள் வியாபாரத்தின் ஒரு பகுதியை ஏழுமலையானுக்கு வேண்டுதல் காணிக்கையாக அளித்து வருகின்றனா்.

அந்த வகையில், மாா்ச், ஏப்ரல் மாதங்களில் ஏழுமலையானின் உண்டியல் வருமானத்துடன், அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடைகளும் பெருகுவது வழக்கம்தான்.

அதன்படி கடந்த 9 நாள்களில் தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக ரூ.26.85 கோடி பெறப்பட்டுள்ளது. அதிகபட்ச நன்கொடையாக ஏழுமலையான் கோயில் கட்டுமான அறக்கட்டளைக்கு ரூ.11.67 கோடியும், எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.6.14 கோடியும், ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்திற்கு ரூ.4.88 கோடியும் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

தேவஸ்தானத்தின் வித்யாதான அறக்கட்டளைக்கு ராஜமஹேந்திரவரத்தைச் சோ்ந்த திருமலை கல்வி நிறுவனங்களின் தலைவா் திருமலை ராவ் மற்றும் அவரது மனைவி இணைந்து ரூ1.01 கோடி நன்கொடை வழங்கினா். கோயில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி ஆகியோரிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.