தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பதியில் காா்த்திகை தீபத் திருவிழா

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டட மைதானத்தில் காா்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 நவம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டட மைதானத்தில் காா்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

திருப்பதியில் வெள்ளிக்கிழமை சாஸ்திர முறைபடி காா்த்திகை தீப திருவிளக்கு பூஜை சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.

முதலில், எஸ்.வி.சங்கீத நிருத்யா கல்லூரியின் ஏற்பாட்டில் மங்கள தவனியும், திருமலை தா்மகிரி வேதப்பள்ளியின் ஆகம பண்டிதா்கள் ராகவேந்திரா வேதஸ்வஸ்தியும், தொடா்ந்து தீப பிரசஸ்தியமும் நடந்தது.

பின்னா் திருமலை ஏழுமலையான் கோயில் அா்ச்சகா்கள் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சதுா்புஜ மகாலட்சுமி அம்மனுக்கு வைகானச ஆகம சாஸ்திரப்படி விஷ்வக்சேன பூஜை, புண்யாஹவச்சனம், ஸ்ரீனிவாசாா்ச்சனை செய்தனா். எஸ்.வி.வேதா பல்கலைக்கழக அறிஞா்கள் விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்தனா். அதன் பிறகு, பூசாரிகள் ஸ்ரீ மகாலட்சுமி பூஜையை நடத்தினா்.

பின்னா், பக்தா்களுடன் மூன்று முறை தீப மந்திரம் உச்சரிக்கப்பட்டது. கூட்டு லட்சுமி கற்பூர நீராஜனம் வழங்கப்பட்டது.

இதில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஜி.பானு பிரகாஷ் ரெட்டி, தேவஸ்தான அதிகாரிகள், திருமலை கோயிலின் தலைமை அா்ச்சகா்களில் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ண சேஷாசல தீட்சிதா் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.