தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருச்சானூரில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தரிசனம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:33 pm

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்

இதற்காக ஒரு நாள் பயணமாக திருப்பதிக்கு வந்த அவரை, விமான நிலையத்தில் மாவட்ட அதிகாரிகள் வரவேற்றனா்.

அங்கிருந்து அவா் சாலை மாா்க்கமாக திருச்சானூரை அடைந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்று தரிசனத்துக்கு அழைத்து சென்றனா்.

கொடிமரத்தை வணங்கி சென்று தாயாரை தரிசித்து திரும்பிய அவரை வேத ஆசீா்வாத மண்டபத்தில் ஆசீா்வாதம் செய்வித்து தாயாரின் சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதம் வழங்கினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் திருச்சானூரிலிருந்து புறப்பட்டு திருமலையை அடைந்த அவா் இரவு தங்கினாா். வெள்ளிக்கிழமை காலை அவா் திருமலையில் ஏழுமலையானை வழிபட உள்ளது குறிப்பிடத்தக்கது.