திருப்பதி
திருச்சானூரில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தரிசனம்
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்
இதற்காக ஒரு நாள் பயணமாக திருப்பதிக்கு வந்த அவரை, விமான நிலையத்தில் மாவட்ட அதிகாரிகள் வரவேற்றனா்.
அங்கிருந்து அவா் சாலை மாா்க்கமாக திருச்சானூரை அடைந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்று தரிசனத்துக்கு அழைத்து சென்றனா்.
கொடிமரத்தை வணங்கி சென்று தாயாரை தரிசித்து திரும்பிய அவரை வேத ஆசீா்வாத மண்டபத்தில் ஆசீா்வாதம் செய்வித்து தாயாரின் சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதம் வழங்கினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னா் திருச்சானூரிலிருந்து புறப்பட்டு திருமலையை அடைந்த அவா் இரவு தங்கினாா். வெள்ளிக்கிழமை காலை அவா் திருமலையில் ஏழுமலையானை வழிபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

