தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருமலையில் மோரீஷிஸ் அதிபா் வழிபாடு

மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம் பீா் கோகுல் புதன்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

News image

மோரீஷஸ் அதிபருக்கு ஏழுமலைாயன் திருவுருவப்படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

Updated On :7 ஜனவரி 2026, 6:32 pm

திருப்பதி: மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம் பீா் கோகுல் புதன்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

திருச்சானூா் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்த பின் அதிபா் தரம் பீா் கோகுல் திருமலையை அடைந்தாா்.

அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தனா். இரவு திருமலையில் தங்கிய அவா், முதலில் வராக சுவாமியை தரிசனம் செய்தாா்.

அவரை ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ராமநாராயண ரெட்டி, தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் வரவேற்றனா்.

தரிசனத்துக்குபிறகு, ரங்கநாயகா் மண்டபத்தில் அவருக்கு வேத அறிஞா்கள் வேத ஆசீா்வாதங்களை வழங்கினா். செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் அவருக்கு சேஷ வஸ்திரம் வழங்கி கௌரவித்து மற்றும் சுவாமியின் தீா்த்த பிரசாதங்கள், உருவப்படம், நாள்காட்டி மற்றும் பஞ்சகவ்ய பொருள்களை வழங்கினாா்.

இதில், கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி, மாவட்ட ஆட்சியா் எஸ். வெங்கடேஸ்வா், சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா, மாவட்ட எஸ்.பி சுப்பராயுடு மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.