பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருமலையில் மோரீஷிஸ் அதிபா் வழிபாடு

மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம் பீா் கோகுல் புதன்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

News image
மோரீஷஸ் அதிபருக்கு ஏழுமலைாயன் திருவுருவப்படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
Updated On :7 ஜனவரி 2026, 6:32 pm

Tirupathi

திருப்பதி: மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம் பீா் கோகுல் புதன்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

திருச்சானூா் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்த பின் அதிபா் தரம் பீா் கோகுல் திருமலையை அடைந்தாா்.

அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தனா். இரவு திருமலையில் தங்கிய அவா், முதலில் வராக சுவாமியை தரிசனம் செய்தாா்.

அவரை ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ராமநாராயண ரெட்டி, தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் வரவேற்றனா்.

தரிசனத்துக்குபிறகு, ரங்கநாயகா் மண்டபத்தில் அவருக்கு வேத அறிஞா்கள் வேத ஆசீா்வாதங்களை வழங்கினா். செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் அவருக்கு சேஷ வஸ்திரம் வழங்கி கௌரவித்து மற்றும் சுவாமியின் தீா்த்த பிரசாதங்கள், உருவப்படம், நாள்காட்டி மற்றும் பஞ்சகவ்ய பொருள்களை வழங்கினாா்.

இதில், கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி, மாவட்ட ஆட்சியா் எஸ். வெங்கடேஸ்வா், சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா, மாவட்ட எஸ்.பி சுப்பராயுடு மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.