தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்து

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி, விஐபி தரிசன டிக்கெட்டுகள் ரத்து குறித்து...

News image

திருப்பதி ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2026, 10:46 am IST

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறையால் பக்தர்களின் நலன்கருதி, நாளை ஸ்ரீவாணி, விஐபி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். இதனால், பக்தர்களின் நலன்கருதி, நாள்தோறும் இணையவழியில் முன்பதிவு செய்து வழங்கப்படும் 800 ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் நாளை (ஜூன் 29) ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், விஐபி பிரேக் தரிசனங்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், விஐபி தரிசனத்துக்கான எந்தவொரு பரிந்துரைக் கடிதங்களும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆகையால், இந்த மாற்றங்களைக் கருத்தில்கொண்டு, திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தங்களின் ஆன்மிக பயணத்தைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Summary

TTD cancels VIP break and Srivani Darshan at Tirumala as rush spikes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.