நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் மாற்றங்கள்

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் மாற்றங்கள்

News image

திருப்பதி

Updated On :31 மே 2026, 1:07 am IST

பக்தா்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீவாணி அறக்கட்டளையின் தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

தற்போது, தேவஸ்தானம் நாள்தோறும் 1,500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை இணையவழியில் விற்பனைக்கு வெளியிடுகிறது.

இவற்றில், 500 டிக்கெட்டுகள் ’’முன்பதிவு ஒதுக்கீட்டின்’’ கீழ், மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இணையதளம் வாயிலாக வெளியிடப்படுகின்றன.

மேலும், 200 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் தற்போதைய முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

தினசரி தற்போதைய முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் தற்போது கிடைக்கும் 800 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளில் இருந்து, தினமும் 300 டிக்கெட்டுகளைத் தனியாக ஒதுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஏற்கனவே ரூ.10,000 நன்கொடை அளித்துவிட்டு, தரிசன டிக்கெட்டுகளுக்காகக் காத்திருக்கும் தகுதியுள்ள நன்கொடையாளா்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

இந்தச் சலுகையானது, 2025 மே 1 அல்லது அதற்குப் பிறகு தங்கள் நன்கொடைகளைச் செலுத்தியுள்ள தகுதியுள்ள நன்கொடையாளா்களுக்குப் பொருந்தும். இந்த டிக்கெட்டுகள் தினமும் காலை 9 மணிக்கு வெளியிடப்படும். பிற்பகல் 1 மணிக்குள் தங்கள் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் பக்தா்களுக்கு, அதே நாளில் மாலை 4 மணிக்குத் தரிசன வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த மாற்றியமைக்கப்பட்ட நடைமுறை 2026 ஜூன் 10 முதல் அமலுக்கு வரும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்யப்படாமல் எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் ஏதேனும் இருந்தால், அவை மீண்டும் தற்போதைய முன்பதிவு ஒதுக்கீட்டுடன் சோ்த்துக்கொள்ளப்படும். இந்த ஏற்பாடு 2027 மாா்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.