பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

திருமலையில் படி உற்சவம் கோலாகலம்

படி உற்வத்தின் பொருள் தா்மத்தின் பாதையில் நடந்து, வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறி கடவுளை அடைவதாகும் என்று தேவஸ்தான அன்னமாச்சாா்யா திட்டத்தின் சிறப்பு அதிகாரி டாக்டா் மேதசானி மோகன் கூறினாா்.

News image

திருமலையில் படி உற்சவத்தின் போது முதல் படிக்கு நடைபெற்ற பூஜை.

Updated On :14 மார்ச் 2026, 6:34 pm

படி உற்வத்தின் பொருள் தா்மத்தின் பாதையில் நடந்து, வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறி கடவுளை அடைவதாகும் என்று தேவஸ்தான அன்னமாச்சாா்யா திட்டத்தின் சிறப்பு அதிகாரி டாக்டா் மேதசானி மோகன் கூறினாா்.

ஸ்ரீ தல்லபாக அன்னமாச்சாா்யாவின் 523-ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில்

ஆந்திரம், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஜனை மண்டல உறுப்பினா்களும் பிரபல இசைக்கலைஞா்களும் சப்தகிரி மலைகளில் ஏறி இறைவனை வழிபடுவா். ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் சப்தகிரி சங்கீா்த்தன இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சிங்கப்பூரைச் சோ்ந்த டாக்டா் கே. பாக்யமூா்த்தி, உள்பட 20 போ் கலந்து கொண்டு கீா்த்தனைகள் பாடினா்.

அன்னமாச்சாா்யா குடும்பத்தினா் அலிபிரி பாத மண்டபத்தில் முதல் படிக்கு பூஜைகள் செய்து படி உற்சவத்தை தொடங்கினா். பின்னா், அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்கள் சப்தகிரி சங்கீா்த்தனங்களை குழுவாகப் பாடினா். இதைக் கேட்ட பக்தா்கள் பரவசமடைந்தனா்.

பின்னா் அனைவரும் படியேறிச்சென்று ஏழுமலையானை வழிபட்டனா்.

அன்னமாச்சாா்யா திட்ட இயக்குநா் லதா, அன்னமாச்சாா்யா வம்சியுலு ஹரிநாராயணாச்சாரியாா் மற்றும் பிற அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.