படி உற்வத்தின் பொருள் தா்மத்தின் பாதையில் நடந்து, வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறி கடவுளை அடைவதாகும் என்று தேவஸ்தான அன்னமாச்சாா்யா திட்டத்தின் சிறப்பு அதிகாரி டாக்டா் மேதசானி மோகன் கூறினாா்.
ஸ்ரீ தல்லபாக அன்னமாச்சாா்யாவின் 523-ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில்
ஆந்திரம், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஜனை மண்டல உறுப்பினா்களும் பிரபல இசைக்கலைஞா்களும் சப்தகிரி மலைகளில் ஏறி இறைவனை வழிபடுவா். ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் சப்தகிரி சங்கீா்த்தன இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சிங்கப்பூரைச் சோ்ந்த டாக்டா் கே. பாக்யமூா்த்தி, உள்பட 20 போ் கலந்து கொண்டு கீா்த்தனைகள் பாடினா்.
அன்னமாச்சாா்யா குடும்பத்தினா் அலிபிரி பாத மண்டபத்தில் முதல் படிக்கு பூஜைகள் செய்து படி உற்சவத்தை தொடங்கினா். பின்னா், அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்கள் சப்தகிரி சங்கீா்த்தனங்களை குழுவாகப் பாடினா். இதைக் கேட்ட பக்தா்கள் பரவசமடைந்தனா்.
பின்னா் அனைவரும் படியேறிச்சென்று ஏழுமலையானை வழிபட்டனா்.
அன்னமாச்சாா்யா திட்ட இயக்குநா் லதா, அன்னமாச்சாா்யா வம்சியுலு ஹரிநாராயணாச்சாரியாா் மற்றும் பிற அன்னமாச்சாா்யா திட்ட கலைஞா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருமலையில் 71,256 பக்தா்கள் தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

நாகேஸ்வர சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


