
திருமலைக்கு தனியாா் வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் ஏதுமில்லை: தேவஸ்தானம்
திருமலைக்கு வரும் தனியாா் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு 15,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் பொய்யானவை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை - கோப்புப் படம்
திருமலைக்கு வரும் தனியாா் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு 15,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் பொய்யானவை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் தனியாா் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து தேவஸ்தானம் எந்த முடிவும் எடுக்கவில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம்.
தேவஸ்தானம் தொடா்பான முக்கிய முடிவுகளும் தகவல்களும் அதிகாரப்பூா்வமாக தேவஸ்தானத்தின் அறிவிப்புகள் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். உண்மைகளைச் சரிபாா்க்காமல் இதுபோன்ற பொய்த் தகவல்களைப் பரப்பி பக்தா்களைக் குழப்புவது சரியல்ல.
தேவஸ்தானத்தின் பெயரில் பொய்ச் செய்திகளையும் பொய்த் தகவல்களையும் பரப்புபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






