அனக்காவூர் வட்டாரத்தில் விவசாய உற்பத்தியாளர் குழு கூட்டம்

அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த எச்சூர், தவசி, கோட்டகரம், நர்மாபள்ளம், செளந்தர்யபுரம் ஆகிய கிராமங்களில் விவசாய உற்பத்தியாளர் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த எச்சூர், தவசி, கோட்டகரம், நர்மாபள்ளம், செளந்தர்யபுரம் ஆகிய கிராமங்களில் விவசாய உற்பத்தியாளர் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அனக்காவூர் வட்டாரம், எச்சூர் கிராமத்தில் நடைபெற்ற விவசாய உற்பத்தியாளர் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்த வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி, கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் உற்பத்திக் குழுக்களுக்கு வணிகம் (விதை உற்பத்தி செய்தல், காளாண் வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் வேளாண் இடுபொருள் மையம்) குறித்த தகவல்களை விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், ரூ.5 லட்சம் வரையில் தொகுதி நிதியில் இருந்து வாங்க வேண்டிய வேளாண் கருவிகள் குறித்தும், 5 குழுக்களை ஒருங்கிணைந்து சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நெல் அறுவடை இயந்திரம் போன்ற பெரிய கருவிகள் வாங்கி குழுவினர் பயனடையலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.
எச்சூர் கிராமத்தில் நடைபெற்ற விவசாய உற்பத்தியாளர் குழுக் கூட்டத்தில்  உதவி வேளாண்மை அலுவலர், தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயக் குழுவினர் கொண்டு வந்த தீர்மானங்களை பதிவேடுகளில் பதிவு செய்தனர்.
பின்னர், கூட்டுப் பண்ணையம் செயல்படுத்தும் விதம், அதன் மூலம் விவசாயிகள் எவ்வாறு பயனடையலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் திரைப்படம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதே போன்று தவசி, கோட்டகரம், நர்மாபள்ளம், சௌந்தர்யபுரம் ஆகிய கிராமங்களிலும் விவசாய உற்பத்தியாளர் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒரு குழுவுக்கு 100 விவசாயிகள் வீதம் 5 குழுக்களைச் சேர்ந்த 500 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com