தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி: காவல் நண்பர்களுக்கு இலவசச் சீருடை அளிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவச சீருடை, அடையாள அட்டை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவச சீருடை, அடையாள அட்டை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி அல்-அமீன் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்டக் காவல் நண்பர்கள் குழுவின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.ரகுராமன், ஏ.கணேசன், கராத்தே மாஸ்டர் எம்.ஏ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பி.ஏ.முஹம்மத் சிராஜூதீன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் 120 பேரை காவல் நண்பர்கள் குழுவில் சேர்த்து, அவர்களுக்கு அடையாள அட்டை, இலவச சீருடைகளை வழங்கினார்.
மேலும், 120 பேரும் தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி, போக்குவரத்துப் பணி, இரவு ரோந்துப் பணி, தகவல் தொடர்புப் பணி ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார்.
விழாவில், காவல் நண்பர்கள் குழுவின் நிர்வாகி கே.மல்லிகார்ஜூன், பேராசிரியர்கள் சுந்தரேசன், ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com