மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? - செல்வப்பெருந்தகை பதில்!

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம், செல்வப்பெருந்தகை சந்திப்பு பற்றி...

News image
Updated On :3 மார்ச் 2026, 10:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை,

"முதல்வர் ஸ்டாலினை ப. சிதம்பரம் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

திமுகவுடன் நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசி முடித்ததும் உங்களுக்குச் சொல்வோம். திமுகவுடன் கூட்டணி உறுதி.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை.

கூட்டணியில் எந்த முறிவும் இல்லை. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை" என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் தரவிருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்ட நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும் இரு கட்சிகளுமே சமரசத்திற்கு இறங்கி வந்திருப்பதாகவும் அது சமூகமாகவே முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.