வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்கள் 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி வனிதா செவ்வாய்க்கிழமை இரவு பிறப்பித்த உத்தரவு:
வேலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த எம்.லோகநாதன் தெற்கு காவல் நிலையத்துக்கும், லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றிய டி.அசோகன் மாவட்ட தனிப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய எஸ்.சுதாகர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கும், லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் இ.திருநாவுக்கரசு ஆற்காடு கிராமியத்துக்கும், ஜெ.ஆனந்தன் ஆற்காடு நகரத்துக்கும், அங்கிருந்த எம்.அசோக்குமார் லத்தேரிக்கும், ஜி.வெங்கடகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் பணியிடம் மாற்றப்பட்டனர். பொன்னை காவல் ஆய்வாளர் பி.ஏ.அப்பாசாமி பேர்ணாம்பட்டுக்கும், ஆற்காடு கிராமிய ஆய்வாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி பொன்னைக்கும், செய்யாறு ஆய்வாளர் கே.மங்கையர்கரசி திருவண்ணாமலை நகர குற்றப் பிரிவுக்கும், பேர்ணாம்பட்டு ஆய்வாளர் ஆர்.சீனிவாசன் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பொறுப்பு வகித்த கே.நிலவழகன் அதே பணிக்கு நிரந்தரமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.