சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

முழு அடைப்புக்கு ஆதரவு கேட்ட திமுக, கூட்டணிக் கட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு திருவண்ணாமலை, மங்கலம் பகுதிகளில் புதன்கிழமை திமுக கூட்டணிக் கட்சியினர் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம்

Updated On :5 ஏப்ரல் 2018, 9:43 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு திருவண்ணாமலை, மங்கலம் பகுதிகளில் புதன்கிழமை திமுக கூட்டணிக் கட்சியினர் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப்.5) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு திமுக கூட்டணிக் கட்சியினர் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.
திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை நகரின் முக்கியச் சாலைகளில் புதன்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணியினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனர். முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், திமுக நகரச் செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் ஆகியோர் வியாபாரிகள், பொதுமக்களிடம் முழு அடைப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் நகரத் தலைவர் என்.வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, திமுக நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, வழக்குரைஞர் அ.அருள்குமரன், அனைத்து அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மங்கலத்தில்...: திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராம கடை வீதிகளில் கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தலைமையிலான அனைத்துக் கட்சியினர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். 
இதில், திமுக துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.பி.அண்ணாமலை, மேற்கு ஒன்றியச் செயலாளர் பெ.சு.சரவணன், அவைத் தலைவர் ம.வே.கன்னி, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் இரா.ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.