மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது

திருவண்ணாமலை அருகே மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:45 pm

திருவண்ணாமலை அருகே மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையை அடுத்த ஜப்திகாரியந்தல் கிராமத்தில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக செங்கம் வட்டாட்சியர் ரேணுகாவுக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை குறிப்பிட்ட இடத்தில் வட்டாட்சியர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சிமென்ட் நிறுவன ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு, தார்பாய் போர்த்தியபடி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஜப்திகாரியந்தல் கிராமத்தில் உள்ள ஆற்றில் இருந்து மணல் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, லாரியை பறிமுதல் செய்த வட்டாட்சியர் ரேணுகா, திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், லாரியை ஒட்டி வந்தவர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் கண்ணன் (30) என்பதும், லாரி உரிமையாளர் தருமபுரியைச் சேர்ந்த கார்த்தி என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, வினோத்கண்ணனை போலீஸார் கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.