திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகூத்தாண்டவர் கோயிலில் வரும் 25-ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா வரும் 25-ஆம் தேதி நடத்தப்படுகிறது. முன்னதாக, இந்தக் கோயிலில் கடந்த 6-ஆம் தேதி மகாபாரத தொடர் சொற்பொழிவு தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் மாலை வேளையில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. வரும் 24-ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருநங்கைகள் பங்கேற்கும் மிஸ் வேடந்தவாடி அழகிப் போட்டியும், இரவு 10 மணிக்கு குறவன், குறத்தியுடன் திருநங்கைகள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெறுகின்றன.
தேர்த் திருவிழா: தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீகூத்தாண்டவர் தேரோட்டம் தொடங்குகிறது. இந்தத் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள திருநங்கைகள் கோயிலில் திரண்டு புதுமணப் பெண்களைப்போல தங்களை அலங்கரித்துக்கொண்டு, பூசாரியின் கைகளால் தாலி கட்டிக்கொள்வர்.
இந்த நிகழ்ச்சியைக் காண வேடந்தவாடி, திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொள்வர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபி வெற்றிக்காக யாக பூஜை நடத்திய ரசிகர்கள்!

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!

”எடப்பாடியார் பதில் சொல்லியே ஆகணும்!” பிரேமலதா விஜயகாந்த் | ADMM
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


