எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:54 am IST

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்டது புதுப்பாளையம் ஊராட்சி. இங்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலபாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
இந்த ஆய்வின் போது, மருத்துவர்கள், செவிலியர், சுகாதார ஆய்வாளர் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு தரமானசிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து, நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், மறைந்த தமிழக முன்னாள் முதல் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, புதுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக பொருளாளர் துரை, பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் மீனாகுமாரி புருசோத்தமன், நாகபாடி முன்னாள் ஊராட்சித் தலைவர் சுப்பரமணி உள்ளிட்டோர் 
உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.