திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:54 am IST

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்டது புதுப்பாளையம் ஊராட்சி. இங்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலபாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
இந்த ஆய்வின் போது, மருத்துவர்கள், செவிலியர், சுகாதார ஆய்வாளர் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு தரமானசிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து, நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், மறைந்த தமிழக முன்னாள் முதல் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, புதுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக பொருளாளர் துரை, பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் மீனாகுமாரி புருசோத்தமன், நாகபாடி முன்னாள் ஊராட்சித் தலைவர் சுப்பரமணி உள்ளிட்டோர் 
உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.