17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நூல் வெளியீட்டு விழா

வந்தவாசியில் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்ற  ஆய்வு நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:53 am IST

வந்தவாசியில் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்ற  ஆய்வு நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர்  மா.மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் பு.நடராசன், புலவர் பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூங்குயில் பதிப்பக நிறுவனர் டி.எல்.சிவகுமார் வரவேற்றார்.   வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி செயலர் எம்.ரமணன் நூலை வெளியிட, இரா.சிவகுமார் அதைப் பெற்றுக் கொண்டார். 
வந்தவாசி ஸ்ரீநாதமுனி வைஷ்ணவ சபை நிர்வாகி இரா.ஸ்ரீனிவாச இராமானுஜதாசர், இரா.வ.கமலக்கண்ணன் ஆகியோர் நூல் குறித்து பேசினர். நூல் ஆசிரியர் முனைவர் ம.மகாலட்சுமி ஏற்புரையாற்றினார். தமுஎகச மாவட்டத் தலைவர் கவிஞர் ஆரிசன், 
முன்னாள் நகர்மன்றத் தலைவர் க.சீனிவாசன், மருத்துவர் குமார்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெ.பார்த்திபன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.