இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா,  "வள்ளலார் நமக்கு வழிகாட்டி' என்ற நூல் வெளியீட்டு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:52 am IST

திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா,  "வள்ளலார் நமக்கு வழிகாட்டி' என்ற நூல் வெளியீட்டு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை கணேஷ் பன்னாட்டு உணவகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தமிழ்ச் சங்க நிறுவனர் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் ந.சண்முகம் வரவேற்றார். திருப்பூர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய "வள்ளலார் நமக்கு வழிகாட்டி' என்ற நூலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் வெளியிட, முதல் பிரதியை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் த.மா.பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, மறைந்த தமிழ் அறிஞர்கள் பிரபஞ்சன், அ.ப.அறவாணன் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
நிகழ்ச்சியில், ஆய்வறிஞர் பி.கோ.கோவிந்தராஜன், புயல்மொழிப் புலவர் கோவிந்தசாமி, திருக்குறள் ராமசாமி, காமராஜ், முருகையன், கவிஞர் லதா பிரபுலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.