ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு: கைதாகி ஜாமீனில் வந்த விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பசுமை வழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி சிறைக்குச் சென்று, ஜாமீனில் வந்த 65 விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:14 am

DIN

திருவண்ணாமலையில் பசுமை வழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி சிறைக்குச் சென்று, ஜாமீனில் வந்த 65 விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பசுமை வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, பசுமை வழிச் சாலைக்கான அரசாணை நகலை விவசாயிகள் எரித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா, திருவண்ணாமலை ரவுண்டானா பகுதிகளில் அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயற்குழு எம்.வீரபத்திரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வி.சுப்பிரமணி, மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், பசுமை வழிச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களும், வழக்குரைஞர்களுமான எஸ்.அபிராமன், கு.ஜோதி, டி.பிரகாஷ் உள்ளிட்ட 95 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு: கைது செய்யப்பட்ட 95 விவசாயிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, வழக்குரைஞர் பாசறை பாபு தலைமையிலான வழக்குரைஞர்கள் திருவண்ணாமலை ஜெ.எம். முதலாவது நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 95 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மீண்டும் ஆர்ப்பாட்டம்: ஜாமீனில் வெளியே வந்த விவசாயிகளில் சுமார் 65 பேர் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார்.
நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்த திருவண்ணாமலை மாவட்டக் காவல் துறையைக் கண்டித்தும், பசுமை வழிச் சாலைத் திட்டத்தை கைவிடக் கோரியும் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.