திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாதந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மார்ச் மாதத்துக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகளம், நீச்சல், கபடி, கையுந்துபந்து உள்ளிட்ட போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
காலை முதல் மாலை வரை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு, சான்றுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன் வழங்கினார். இதில், மாவட்ட கையுந்துபந்து பயிற்சியாளர் ஆ.முனுசாமி மற்றும் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

