திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாதந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மார்ச் மாதத்துக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகளம், நீச்சல், கபடி, கையுந்துபந்து உள்ளிட்ட போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
காலை முதல் மாலை வரை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு, சான்றுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன் வழங்கினார். இதில், மாவட்ட கையுந்துபந்து பயிற்சியாளர் ஆ.முனுசாமி மற்றும் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையில் நாளை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா் அழகா்

இலங்கை- செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு: நீதிமன்ற உத்தரவில் மீண்டும் தொடக்கம்

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு - வாக்குக் கணிப்பில் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

