ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் நுகர்வோர் சேவை மையம் திறப்பு

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனத்தில் மின் நுகர்வோர் சேவை மைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2018, 10:57 pm

DIN

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனத்தில் மின் நுகர்வோர் சேவை மைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை சி.எ.ஜி., சக்தி நிறுவனம் ஆகியவற்றுடன் திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த சேவை மையத்தின் தொடக்க விழாவுக்கு மின்வாரிய செயற்பொறியாளர் எம்.ராஜசேகரன் தலைமை வகித்தார்.
செயற்பொறியாளர்கள் சத்தியநாதன், சங்கரன், சந்திரசேகர், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சினம் தொண்டு நிறுவன இயக்குநர் இராம.பெருமாள் வரவேற்றார். சி.எ.ஜி. நிறுவன முதுநிலை ஆலோசகர் விஷ்ணு, மின்சாரம் தொடர்பான பிரச்னைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன் பயிற்சி, திறன் மேம்பாடு விழிப்புணர்வு, தொடர் பணிகள், சேவைகள், குறைதீர் முறைகள் ஆகியவற்றுக்கு மின் நுகர்வோர்கள் இந்த சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ஏ.நாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்துப் பேசுகையில், இந்த சேவை மையம் மின் வாரியத்துக்கும், பொதுமக்களுக்கு பாலமாக செயல்பட வேண்டும். மின் நுகர்வோர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்.
சினம் தொண்டு நிறுவன இயக்குநர் இராம.பெருமாள் பேசுகையில், இந்த சேவை மையத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மின் நுகர்வோர்கள் தங்களது பிரச்னைகளை தெரிவிக்கலாம். நுகர்வோரின் பிரச்னைகளுக்கு மின்வாரிய அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு விரைந்து தீர்வு காணப்படும் என்றார்.
விழாவில் சி.எ.ஜி. நிறுவன அதிகாரிகள் பரத்ராம், ஸ்ரீதர், மின் ஆலோசகர் வி.ஆர்.ஆனந்தன், டி.அசோக்குமார் உள்பட திரளான மின் நுகர்வோர்கள், சினம் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடி, தானிப்பாடி பகுதிகளில் மின் நுகர்வோர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.