6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் சாதுக்களுக்கு ஆடைகள் தானம்

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சுவாமிகளின் சிஷ்யை அன்னை உமாதேவியின் 76-ஆவது ஆண்டு ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :21 மே 2018, 7:20 pm

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சுவாமிகளின் சிஷ்யை அன்னை உமாதேவியின் 76-ஆவது ஆண்டு ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சாதுக்களுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு, ஆஸ்ரம வளாகத்தில் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆஸ்ரமத் தலைவர் ஆர்.முத்துக்குமாரசாமி, செயலர் டி.வி.எஸ்.ராஜாராம் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு ஆடைகளை தானம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆஸ்ரம நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.