வேட்டவலம் மலைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.
வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேட்டவலத்தை அடுத்த நடுத்திட்டு கிராமத்தில் மது விலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், ஆய்வாளர் கவிதா ஆகியோர் தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலைப் பகுதியில் பாறைகளுக்கு நடுவே இரும்பு பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் கைப்பற்றி அழித்தனர். இந்தப் பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

மயிலாப்பூரில் அமித் ஷா சாலை வலம்!
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

