மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேட்டவலம் மலைப் பகுதியில் 480 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேட்டவலம் மலைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.

Updated On :21 மே 2018, 2:12 am

வேட்டவலம் மலைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர்.
வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேட்டவலத்தை அடுத்த நடுத்திட்டு கிராமத்தில் மது விலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், ஆய்வாளர் கவிதா ஆகியோர் தலைமையிலான போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலைப் பகுதியில் பாறைகளுக்கு நடுவே இரும்பு பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 480 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் கைப்பற்றி அழித்தனர். இந்தப் பகுதியில் சாராயம் காய்ச்சுபவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.