போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போளூர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு, உதவி ஆய்வாளர் தயாளன் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை போளூர் - சேத்துப்பட்டு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போளூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்த டேனியல் மகன் ராஜா (34), முருகேசன் மகன் ரவி (45), சேட்டு மகன் பெத்தல் (44), ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் முருகன் (27)ஆகியோர் போளூரை அடுத்த கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து உரிய அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








