ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பக்தி இன்னிசைக் கச்சேரி

பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீயோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை தெய்வீகப் பாடல்கள் நிகழ்ச்சியும், பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன.

Updated On :8 அக்டோபர் 2018, 9:36 am IST

பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீயோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை தெய்வீகப் பாடல்கள் நிகழ்ச்சியும், பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன.
 திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா 2017 நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி, 2018 டிசம்பர் வரை நடைபெற்று வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸ்ரீயோகிராம் சுரத்குமார் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பயிற்சியாளர் அனுஷா பாலாஜி தலைமையில், ஸ்ரீஅமர பாரதி மாணவிகள் பங்கேற்று ஸ்ரீமுரளீதர சுவாமிகளின் தெய்வீகப் பாடல்களைப் பாடினர். மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை மதுரை பத்மபூஷன் டி.என்.சேஷகோபாலன் மற்றும் குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இவ்விரு நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் மா தேவகி, ஆர்.விஜயலட்சுமி, ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன், ஆஸ்ரம தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் மற்றும் தன்னார்வலர்கள், ஆஸ்ரம ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.