ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் குடிநீர் பிரச்னையைப் போக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
சங்கீதவாடி கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தொடர்ந்து, அந்தக் கிராமத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், உடனடியாக ரூ.3.5 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கவும், அதில் மோட்டார் பொருத்தவும், குழாய்கள், குடிநீர்த் தொட்டி அமைக்கவும் அமைச்சர் ஏற்பாடு செய்தார்.
இந்தப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், சங்கீதவாடி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம், செல்வராஜ், சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

