மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

திருவண்ணாமலையில் துறவிகளாகும் தொழிலதிபர்களின் மகள்கள்

திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் சகோதரர்களின் 2 மகள்கள் வரும் நவம்பர் 11-ஆம் தேதி துறவிகளாகின்றனர்.

Updated On :22 அக்டோபர் 2018, 4:03 am

திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் சகோதரர்களின் 2 மகள்கள் வரும் நவம்பர் 11-ஆம் தேதி துறவிகளாகின்றனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் டி.கவுதம்குமார், டி.அரவிந்த்குமார். ஜெயின் மதத்தைச் சேர்ந்த சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். திருவண்ணாமலை, வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் பல கல்வி, வியாபார நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கவுதம்குமாரின் 2-ஆவது மகள் பிரெக்சா (26). எம்பிஏ பட்டதாரி. அரவிந்த்குமாரின் 2-ஆவது மகள் சுவேதா (26). இவர், சி.ஏ. படித்துள்ளார். இவர்கள் இருவரும் துறவிகளாக முடிவு செய்துள்ளனர். வரும் நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மாதவரத்தில் இருவரின் குரு ஆச்சாரியா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியுடன் ஆன்மிக வாழ்க்கையில் பயணிக்க உள்ளனர். இவர்களை வழியனுப்பும் விழா திருவண்ணாமலையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.