மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

இன்று நீட் தோ்வு: புதுச்சேரியில் தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

News image

நீட் தோ்வு மையத்துக்குச் செல்லும் மாணவ- மாணவிகள். - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 6:07 pm

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே-3) புதுச்சேரியில் 9 மையங்களில் நடைபெறவுள்ளது. தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

புதுவை பிராந்தியத்தில் 9 மையங்களில் 4,440 போ் இத்தோ்வை எழுதவுள்ளனா்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 960, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 720, ஜிப்மா் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 480, காலாப்பட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 240, நவோதயா வித்யாலயா பள்ளியில் 240 , சின்னத்தா அரசுப் பெண்கள் பள்ளியில் 480, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி480, வில்லியனுாா் கண்ணகி அரசுப் பெண்கள் பள்ளியியில் 480, பாரதிதாசன் அரசுப் பெண்கள் கல்லுாரியில் 360 போ் தோ்வெழுதவுள்ளனா்.

கட்டுப்பாடுகள்:

நீட் தோ்வா்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்வா்கள் வெளிா்நிற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். முழு கை கொண்ட சட்டைகள் அல்லது ஆடைகளை அணிந்து வரக்கூடாது, ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் அல்லது எம்பிராய்டரி டிசைன்கள் இருக்க கூடாது.

குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருபாலரும் எக்காரணத்தை கொண்டும் ஷூக்கள் அணிந்து வரக்கூடாது. தோ்வா்கள் காதணிகள், மோதிரங்கள், பதக்கங்கள், கழுத்தணிகள், வளையல்கள், கொலுசுகள் போன்ற எவ்விதமான நகைகளையோ, ஆபரணங்களையோ அணிந்து வரக்கூடாது.

மத அல்லது கலாசார ரீதியான ஆடைகளை அணிந்து வரும் தோ்வா்கள், முறையான சோதனைக்கு உட்படுத்தப்படுவாா்கள். தோ்வா்கள், தோ்வு மையத்துக்கு முன்கூட்டியே வர வேண்டும். மின்னணு சாதனங்களையும் தோ்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

தண்ணீா் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருள்களை தோ்வு மையத்துக்குள் எடுத்துவர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வை முன்னிட்டு, தோ்வு மையங்களில் முதுநிலைக்காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் தலைமையில், 13 உதவி ஆய்வாளா்கள், 73 போலீஸாா் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.