சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கிணற்றில் தவறி விழுந்த சமையல் கலைஞர் சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த சமையல் கலைஞர் இறந்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:14 am

கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த சமையல் கலைஞர் இறந்தார்.
கீழ்பென்னாத்தூர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சமையல் கலைஞர் ராஜா (44). இவர், சில தினங்களுக்கு முன்பு கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
எனினும், அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.