தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

சேத்துப்பட்டில் எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைக்கு

Updated On :13 பிப்ரவரி 2019, 10:12 am IST

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்திருந்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்தச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்திருந்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. 
ஆத்திரை, உலகம்பட்டு, கொலக்கரவாடி உள்பட 12 கிராமங்களைச் சேர்ந்த 74 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மனு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், 27 பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்: இதனிடையே, எட்டு வழிச் சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, எட்டு வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பின் 5 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில், 5 பெண்கள் உள்பட 27 பேர் சேத்துப்பட்டு - போளூர் சாலையில் உள்ள தூய லூர்து அன்னை தேவாலயத்தில் இருந்து போளூர் சாலை வழியாக கருப்புக்கொடி ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். 
அப்போது, அலுவலகத்தில் இருந்த எட்டு வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைவர் வழக்குரைஞர் அபிராமன் தலைமையில் அங்கு கூடியிருந்தவர்களும், அருள் தலைமையில் வந்தவர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு ஆஜராக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதால், மற்றவர்கள் அலுவலகம் முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
செய்யாறு கலால் டிஎஸ்பி அசோக்குமார், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் நரசிம்மன், உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
மாலை 5 மணி வரை ஆட்சேபனை மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.