திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் யூனியன் வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: யூனியன் வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கான ஆள்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தப் பணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் அனைவரும் www.unionbankofindia.co.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 18-ஆம் தேதி என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.