தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

மார்ச் 1 முதல் 4 வரை  இணையதளம் மூலம் மின் கட்டணங்களை செலுத்த முடியாது

விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள்

Updated On :25 பிப்ரவரி 2019, 8:43 am IST

விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திருவண்ணாமலை மின்வாரிய நுகர்வோர்கள் மார்ச் 1 முதல் 4-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று மின் வாரியம் தெரிவித்தது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை கணினி தொழில்நுட்ப மேம்பாட்டுப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த நாள்களில் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் இணையதளம்  (ஆன்லைன்) மூலம் மின் கட்டணத்தைச் செலுத்த இயலாது. 
இந்தப் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து மார்ச் 5-ஆம் தேதி முதல் வழக்கம் போல் இணையதளம் செயல்படும். பின்னர், மின் நுகர்வோர்கள் தங்களது கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.