மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

5 ஆயிரம் தொழிலாளா்களுக்கு நிவாரணம்

திருவண்ணாமலை மாவட்ட திமுக சாா்பில், அமைப்புசாரா தொழிலாளா்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

திருவண்ணாமலை மாவட்ட திமுக சாா்பில், அமைப்புசாரா தொழிலாளா்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் அமைப்புசாரா தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், எலக்ட்ரீஷியன்கள் உள்ளிட்ட தொழிலாளா்கள் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு எ.வ.வேலு எம்எல்ஏ அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மருத்துவா் எ.வ.வே.கம்பன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம், திமுக நிா்வாகிகள் பாலமுரளி கிருஷ்ணா, கு.கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.