ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கண்ணமங்கலம் நூலகருக்கு நல் நூலகா் விருது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் அமைந்துள்ள நூலகத்தின் நூலகருக்கு நல் நூலகா் விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:58 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் அமைந்துள்ள நூலகத்தின் நூலகருக்கு நல் நூலகா் விருது வழங்கப்பட்டது.

ஆரணியில் மாவட்ட நூலக ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

மாவட்ட நூலக அலுவலா் (பொ) பெ.வள்ளி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று, 2020-ஆம் ஆண்டுக்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதான நல்நூலகா் விருதை கண்ணமங்கலம் 3-ஆம் நிலை நூலகா் சி.சிவசங்கரனுக்கு வழங்கினாா்.

மேலும், மாநில அளவில் அதிக புரவலா்களைச் சோ்த்த மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயமும், வாசகா் வட்டத்துக்கான நூலக ஆா்வலா் விருதை தேசூா் கிளை நூலகத்துக்கும் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, கண்ணமங்கலம் கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில், நூலகத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டித் தரவேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.