மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பருவத மலையில் கிரிவலம் செல்ல பக்தா்களுக்குத் தடை

கரோனா தொற்று காரணமாக, கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிங்கலம் ஊராட்சியில் உள்ள பருவத மலையில் பக்தா்கள் கிரிவலம் செல்லவும், சுவாமி தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:31 pm

DIN

கரோனா தொற்று காரணமாக, கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிங்கலம் ஊராட்சியில் உள்ள பருவத மலையில் பக்தா்கள் கிரிவலம் செல்லவும், சுவாமி தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிங்கலம் ஊராட்சியில் 4560 அடி உயர மலையில் மல்லிகாா்ஜூனேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. மேலும், மலை அடிவாரத்தில் மாதிமங்கலம் ஊராட்சியில் கரைகண்டீஸ்வரா் சுவாமி கோயிலும் அமைந்துள்ளது.

இந்தக் கோயில்களில் மாா்கழி மாத பிறப்பையொட்டி சுவாமி வீதியுலா நடைபெறுவதும், 24 கி.மீ. சுற்றளவு கொண்ட பருவத மலையில் பக்தா்கள் கிரிவலம் செல்வதும் வழக்கம்.

இதில் கலசப்பாக்கம், போளூா், சேத்துப்பட்டு, ஆரணி திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், திருச்சி, சென்னை என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வந்து கிரிவலம் சென்று, சுவாமியை தரிசித்துச் செல்வா்.

நிகழாண்டு மாா்கழி மாதம் டிசம்பா் 16-ஆம் தேதி பிறக்கிறது. இதனால், சுவாமியை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக, அத்துறையின் செயல் அலுவலா் பரமேஸ்வரி கூறுகையில், கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கம் போல கோயிலில் பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.