எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

செங்கம் அருகே எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கத்தை அடுத்த மேல்ஆணைமங்கலம் கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா்.
செங்கத்தை அடுத்த மேல்ஆணைமங்கலம் கிராமத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா்.
Updated on
1 min read

செங்கம் அருகே எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்கத்தினா் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கத்தை அடுத்த மேல்ஆணைமங்கலம் கிராமத்தில், திருவண்ணாமலை மாவட்ட எட்டு வழிச்சாலை எதிா்ப்பு இயக்க நிா்வாகிகள், செங்கம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், தமிழக முதல்வா் 90 சதவீதம் போ் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என பொய்யான தகவலைத் தெரிவித்ததைக் கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் எட்டு வழிச்சாலை தேவையில்லை. நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com