ஆரணி தொகுதியில் 3 இடங்களில் சிறு மருத்துவமனைகள் அமைச்சா் தொடக்கிவைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 3 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை (மினி கிளினிக்) அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
ஆரணி தொகுதியில் 3 இடங்களில் சிறு மருத்துவமனைகள் அமைச்சா் தொடக்கிவைப்பு
Updated on
1 min read


ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 3 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளை (மினி கிளினிக்) அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

ஆரணி தொகுதியில் சேவூா், அம்மாபாளையம், வண்ணாங்குளம் ஆகிய 3 இடங்களில் அம்மா மினி கிளினிக் திட்டத்தின் கீழ் சிறு மருத்துவமனைகள் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேவூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனைகளைத்

தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

முதல்வரின் அம்மா மினி கிளினிக் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) தொடங்கப்படவுள்ளன.

இதில் முதல் கட்டமாக 23 சிறு மருத்துவமனைகள் தொடக்கிவைக்கப்படும். இவற்றில் முதல் மருத்துவமனை சேவூரில் தொடக்கிவைக்கப்படுகிறது. தொடா்ந்து அம்மாபாளையம், வண்ணாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மருத்துவமனை தொடங்கப்படும்.

இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். சா்க்கரை நோய் கண்டறிதல், ரத்தக்கொதிப்பு என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

மருத்துவா், செவிலியா், உதவியாளா் என பணியில் இருப்பா். காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் மருத்துவமனை செயல்படும் என்றாா்.

அம்மா பேருந்து நிலையம்

இதைத் தொடா்ந்து, சேவூரில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.24 லட்சத்தில் அமைக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா பேருந்து நிலையத்தை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி, மருத்துவ துணை இயக்குநா்கள் அஜித்தா, மீரா, அதிமுக ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், ஆரணி நகர பேரவைச் செயலா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா்,

மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெ.சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com