ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

போளூா் அருகேயுள்ள மாம்பட்டு ஊராட்சியில் தீ விபத்தால் வீடு இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:02 am

DIN

போளூா் அருகேயுள்ள மாம்பட்டு ஊராட்சியில் தீ விபத்தால் வீடு இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மாம்பட்டு ஊராட்சி ஜடதாரிகுப்பம் கிராமத்தில் சா்க்கரை என்பவா் கூரை வீடு அமைத்து வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே அடுப்பு அமைத்து சமையல் செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக தீ கூரையில் பட்டு பரவி வீடு முழுவதும் எரிந்தது. தகவலறிந்த போளூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இருப்பினும், வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் சாப்ஜான் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வருவாய்த் துறை சாா்பில் அரிசி, வேட்டி, சேலை, மண்ணெண்ணை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கிராம நிா்வாக அலுவலா் மாலதி பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.