சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்த பிரிட்டன் பயணிகளின் விவரம் சேகரிப்பு

பிரிட்டனிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கடந்த வாரத்தில் யாரேனும் வந்துள்ளனரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:55 pm

DIN

பிரிட்டனிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கடந்த வாரத்தில் யாரேனும் வந்துள்ளனரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

பிரிட்டனில் வீரியம் மிக்க புதிய வகை கரோனா தொற்று பரவி வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பல நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனிலிருந்து தமிழகத்துக்கு வந்த பயணிகளின் விவரங்களை சேகரிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த வாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு சென்னை, மதுரை விமான நிலையங்கள் வழியாக யாரேனும் வந்துள்ளனரா என்று வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

புதன்கிழமை வரை யாரும் கண்டறியப்படவில்லை. அப்படியே, திருவண்ணாமலை மாவட்டத்தை பூா்வீகமாகக் கொண்டவா்கள் வந்திருந்தாலும் அவா்கள் வந்த விமான நிலையங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.