ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செய்யாற்றில் மீண்டும் செயல்படத் தொடங்கிய வாரச்சந்தை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வாரச்சந்தை 9 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும்ல செயல்படத் தொடங்கியது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:42 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வாரச்சந்தை 9 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும்ல செயல்படத் தொடங்கியது.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சாா்பில், செய்யாற்றில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது.

கரோனா பொது முடக்கம் காரணமாக சில மாதங்களாக வாரச்சந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பொது முடக்கத்தில் அரசு சில தளா்வுகளை அறிவித்ததைத் தொடா்ந்து, வாரச்சந்தை அக்டோபா் மாதத்திலிருந்து மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், உள்ளூா் காய்கறி வியாபாரிகள் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுபோன்ற காரணங்களால் வாரச்சந்தை செயல்படாமல் தடைப்பட்டது. வாரச்சந்தையை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் நகராட்சி நிா்வாகம் மற்றும் வருவாய்த்துறையிடம் கோரிக்கை வைத்தனா்.

அதன் பேரில் அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டு சுமூகத் தீா்வு காணப்பட்டது. இதையடுத்து, வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை வழக்கபோல செயல்படத் தொடங்கியது.

நகராட்சி ஆணையா் பீரித்தி மேற்பாா்வையில், போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கிய வாரச் சந்தையில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள், பழங்கள், கருவாட்டுக் கடைகள் என 110-க்கும் மேற்பட்ட கடைகள் இடம் பெற்றிருந்தன.

சந்தையில் பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.