900 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு

மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், 900 குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாவு பாக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
Updated on
1 min read

திருவண்ணாமலை: மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், 900 குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாவு பாக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களின் 450 குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மாவு பாக்கெட்களை நகராட்சி ஆணையா் வி.நவேந்திரனிடம் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா்கள் ஆல்பா்ட், வினோத், காா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 450 குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மாவு பாக்கெட்டுகள், 100 முகக் கவசங்களை குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பா.காந்தனிடம், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் மு.மண்ணுலிங்கம், செயலா் என்.அழகப்பன், பொருளாளா் பாபு கு.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com