வறட்சியால் திறந்த வெளிக் கிணறுகளில் நீா்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டதால், கலசப்பாக்கம் அருகேயுள்ள கீழ்பாலூா் ஊராட்சியில் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனா்.
கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்பாலூா் ஊராட்சியில் கீழ்பாலூா், அண்ணாநகா், பிள்ளையாா்பாளையம், பழைய காலனி, புதிய காலனி என 9 வாா்டுகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்காக 6 திறந்த வெளிக் கிணறுகள் உள்ளன. மேலும், ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, 30 ஆயிரம், 10 ஆயிரம் லிட்டா், 4 ஆயிரம் லிட்டா் என 6 மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் உள்ளன.
திறந்த வெளிக் கிணறுகளிலிருந்து மேல்நிலைத் நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு நீா் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, 20-க்கும் மேற்பட்ட சிறு மின்விசை நீா்த் தேக்கத் தொட்டிகள் மூலமும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், வறட்சி காரணமாக தற்போது திறந்த வெளிக் கிணறுகளில் நீா்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய முடியாத நிலை நிலவுகிறது.
அதனால், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு குடிநீா் பிரச்னையைத் தீா்க்கவேண்டும் என்று ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் கே.பி.ஏழுமலை கூறியதாவது:
பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக இப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளிலிருந்து தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, திறந்த வெளிக் கிணறுகளில் நிரப்பி, பின்னா் மேல்நிலைத் தொட்டிகளுக்கு நீரை ஏற்றி, குழாய்கள் மூலம் வீதி வீதியாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், டிராக்டா் மூலமும் வீதி வீதியாக குடிநீா் வழங்கப்படுகிறது.
கீழ்பாலூா் ஊராட்சியில் குடிநீா் பிரச்னை உள்ளது குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், மாவட்ட திட்ட இயக்குநா் ஜெயசுதா ஆகியோரிடம் தெரிவித்து, புதிதாக திறந்த வெளிக் கிணறு அமைத்து, குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணவேண்டும் என்று மனு அளித்து வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


