சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை காலை திடீரென பயங்கர வெடி சப்தத்துடன் விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் ஆலையில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த நிலையில், ஒருவர் உடல் கருகி சடலமாக மீட்கப்பட்டார். மேலும், மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவரும் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Summary
Sattur Firecracker Factory Accident! One Dead; Three Critically Injured!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்!
பட்டாசு ஆலை விபத்தில் பலி: மாணிக்கம் தாகூா் இரங்கல்

குஜராத்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 போ் உயிரிழப்பு; 6 போ் காயம்!

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


