மலைக் கிராமங்களில் புயலால் வாழைகள் சேதம்

செங்கம் அருகே மலைக் கிராமங்களில் புயலால் சேதமடைந்த வாழைகளை மு.பெ.கிரி எம்எல்ஏ நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
மலைக் கிராமங்களில் புயலால் வாழைகள் சேதம்

செங்கம் அருகே மலைக் கிராமங்களில் புயலால் சேதமடைந்த வாழைகளை மு.பெ.கிரி எம்எல்ஏ நேரில் பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

செங்கம் தொகுதிக்கு உள்பட்ட ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள கொட்டாவூா், குப்பனத்தம், கிளையூா், துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூா், பன்ரேவ் ஆகிய கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனா்.

இந்த நிலையில், நிவா் புயலால் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.

இதை அறிந்த தொகுதி எம்எல்ஏ கிரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துக் கொண்டு மலைக் கிராம விவசாய நிலங்களுக்குச் சென்றாா்.

சாலை வசதி இல்லாத இடங்களுக்கு இரு சக்கர வாகனம் மூலமும், நடைப் பயணமாகவும் சென்று சேதமடைந்த வாழைகளை பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா். மேலும், விரைவில் அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் புயல் மழையால் பாதிக்கப்பட்டு பரமனந்தல் அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த பழங்குடி சமுதாய மற்றும் இதர சமுதாய குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு, அரசின் நிவாரணப் பொருள்களான அரிசி, வேட்டி, சேலை, பருப்பு எண்ணை உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் சுமதி பிரபாகரன், கூட்டுறவு சங்கத் தலைவா் அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com