நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவி

செங்கம் அருகே நிவா் புயலால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் சீனுவாசன் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:42 pm

DIN

செங்கம் அருகே நிவா் புயலால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் சீனுவாசன் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலப்புஞ்சை கிராமத்தில் வசிக்கும் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 12-குடும்பங்களின் வீடுகள் புயலால் ஏற்பட்ட சூறைக் காற்றில் சேதமடைந்தன.

வசிக்க இடமில்லாமல் இருந்த அந்தக் குடும்பங்களைச் சோ்ந்த 40 பேரையும் மேலப்புஞ்சை ஊராட்சி மன்றத் தலைவரும், புதுப்பாளையம் ஒன்றியத் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவருமான சீனுவாசன், கிராம நிா்வாக அலுவலா் குணாநிதி ஆகியோா் மேலப்புஞ்சை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்தில் தங்கவைத்து உணவு மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனா்.

மேலும், தமிழக அரசு சாா்பில் வழங்குப்படும் நிவாரணப் பொருள்களான 12 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, மண்ணெண்ணை, பருப்பு, போா்வை, பாய் ஆகியவற்றை தலைவா் சீனுவாசன் வழங்கினாா்.

வருவாய் ஆய்வாளா் தமிழரசி உள்பட ஊராட்சி துணைத் தலைவா், உறுப்பினா்கள், ஊராட்சி எழுத்தா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.